வெற்றிடமான ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு அஜித் குமார மான்னப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை அஜித் குமார மான்னப்பெரும பெற்றிருந்தார்.
இந்நிலையில் ரஞ்சனின் வெற்றிடத்துக்கு அவரை நியமிக்கும் அதி விசேட வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று பிற்பகல் வெளியிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு, 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்புரிமையை ரஞ்சன் ராமநாயக்க இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நேற்றையதினம் அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனையடுத்தே இன்று ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்துக்கு இன்று அஜித் குமார மான்னப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.